Wednesday 7 November, 2007

"இன்னாது சுடிதாரா..?"- கிருஷ்ண பகவான் கோபம்..

நேற்று ஒரு செய்தி படித்தேன்..

கேரளாவில் இருக்கிற கிருஷ்ணன் கோவில்ல போன வாரம், பத்மநாப சர்மா தலைமையில 9 ஜோதிடர்கள் கூடி கோவில்ல எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பாக்குறதுக்கு தேவபிரசன்னம் பார்த்தாங்களாம். கடைசி நாள்ல அதாவது ஞாயிற்றுக்கிழமை நடந்த தேவபிரசன்னத்துல கிருஷணன் கொஞ்ச நாளா ரொம்ப டென்சனாகிப் போயி இருக்காருன்னு தெரிஞ்சதாம். என்னடான்னு கேட்டா கோவிலுக்கு வர்ற பெண்கள் உடுத்துற உடை அவருக்கு பிடிக்கலையாம். வேற ஒண்ணுமில்லை... இது நாள் வரைக்கும் கோவிலுக்கு வர்ற பெண்கள் வேண்டுகோளுக்கிணங்க, சேலை மட்டும்தான் கட்டிகிட்டு வரணும்னு இருந்த விதியைத் தளர்த்தி,சுடிதாரும் கூட போட்டுகிட்டு வரலாம்னு போன ஜூலை மாதம் தான் கோவில் நிர்வாகம் அனுமதிச்சுருக்காங்க.. இந்த சுடிதார் மேட்டர்ல கிருஷ்ணர் டென்ஷனாயிட்டாருன்னு ஜோதிடர்கள் கண்டுபிடிச்சு சொல்லி இந்த மாதிரி வழக்கத்தையெல்லாம் மாத்தி எப்படி உத்தரவு போடலாம்னு நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிச்சுருக்காங்களாம். அதுனால இப்ப கோவிலுக்குள்ள பெண்களுக்கு சேலை மட்டும்தான் அனுமதின்னு கோவில் நிர்வாகம் திரும்பவும் உத்தரவு போட்டுருக்காங்க..

அடங்கொக்கா மக்கா... நாட்டுல எவ்வளவு பிரச்சினை நடந்துட்டுருக்கு.. அதுல எல்லாம் டென்சனாகாத கிருஷ்ணன் பெண்கள் சுடிதாரப் பார்த்து டென்சனாகி போயிருக்காருன்னா எப்படி?.. இந்த கிருஷ்ணர் வரலாற பார்த்தாலே பிள்ளைக விசயத்துல பண்ணாத பிராடுத்தனம் எல்லாம் பண்ணுன ஆளுன்னு பார்த்திருக்கேன்.சின்ன புள்ளையில வெண்ணைய திருடித் தின்னதெல்லாம் விட்டுருவோம்.. அது ஏதோ சின்னப் புள்ள வயித்துக்கு சாப்பிட்டு போவுது.. வாலிப வயசிலயும் ஆத்துல பொம்பளப் பிள்ளைக குளிக்கப்போனா ஒளிஞ்சிருந்து பார்க்குறதும்.. பிள்ளைக கரையில வச்சுட்டு போன துணியெல்லாம் எடுத்து வச்சுகிட்டு மரத்து மேல உக்காந்துட்டு குளிச்சு முடிச்சு வந்த பிள்ளைக துணியை கேட்டா, கைய நீட்டி "கிருஷ்ணா தா தா"ன்னு கேட்டு துணியில்லாத பிள்ளைகள குதிக்க சொல்லி வேடிக்கையெல்லாம் பார்த்திருக்கானாம்.. கேட்டா எல்லாம் கிருஷ்ணனின் திருவிளையாடலாம்..! மவனே!"ஈவ் டீசிங்"ல புடிச்சு உள்ளே போட வேண்டிய ஆளை எல்லாம் நம்மாளுக பாவம், கடவுளா நினைச்சு கும்பிட்டுகிட்டு இருக்காங்க.. அதுல அவருக்கு பொம்பளைக இப்ப சுடிதார் போட்டா கோபம் வருதாம்.. அதையெல்லாம் ஜோசியர்னு சொல்லிகிட்டு சில பேரு சோழி போட்டு பார்த்து கண்டுபிடிக்கிறாங்களாம்.. அதையும் எல்லோரும் கடைபிடிக்கணுமாம்..(அப்புறம் ஒரு விசயம்.. இந்த தேவபிரசன்னம் பார்த்த கூட்டத்துல நம்ம "கண்டரரு மோகனரரு" எல்லாம் இருந்தாரானு தெரியலை..)

இந்த "தேவ பிரசன்னம்"பார்க்கிற சமாச்சாரம் காலங்காலமா நடந்துட்டு வருது. கேரளாவில 90 சதவீததுக்கு மேல "கல்வியறிவு" பெத்தவங்கலாம்ல..! நம்ம நாட்டுல படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு இப்பவாச்சும் விளங்குதா...